கொரோனா தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இனி இது தேவையில்லை!

கொரோனா தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இனி இது தேவையில்லை!

Update: 2021-04-29 06:40 GMT

உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. தற்போது அந்நாட்டு தான் முதலிடத்தில் உள்ளது. எனினும் அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இதனால், அமெரிக்க மக்கள் தொகையில் 42 சதவீதத்தினர் இதுவரையில் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டுள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேர் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர். இதனை அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்து உள்ளது.


இதன் தொடர்ச்சியாக அந்த மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. இதன்படி, அமெரிக்காவில் முழு அளவில் தடுப்பூசி எடுத்து கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

நண்பர்களுடன், வெளிப்புற உணவு விடுதியில் ஒன்றாக உணவருந்தும்பொழுதும், முக கவசம் அணியாமல் இருப்பது முழு அளவில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதுகாப்புமிக்க ஒன்று என்றே எடுத்து கொள்ளலாம் என அந்த மையம் தெரிவித்து உள்ளது.

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடுகளால் முக கவசம் அணியாமல் அமெரிக்க மக்கள் வெளியே செல்ல கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து கூறிய அமெரிக்க அதிபர் பைடன், தடுப்பூசிகளை நிர்வகிப்பதில் அதிர்ச்சியூட்டும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கடுமையான முக கவசம் பரிந்துரைகளை இப்போது தளர்த்தபடும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News