இரவு விடுதியில் நடனமும் ஆடனும்.. பாலியல் தொழிலும் செய்யனும்.. இந்திய தம்பதி அடாவடி..

இரவு விடுதியில் நடனமும் ஆடவேண்டும்.. பாலியல் தொழிலும் செய்ய வேண்டும்.. இந்திய தம்பதியின் அடாவடி..

Update: 2020-02-15 13:47 GMT

சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் தங்களிடம் வேலைக்கு வந்த இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். சிங்கப்பூரில் இந்திய தம்பதியர் இரவு விடுதி நடத்தி வந்துள்ளனர். இங்கு நடனமாடுவதற்கு பங்களாதேஷ் நாட்டைச்  சேர்ந்த 3 இளம் பெண்களை அத்தம்பதி பணியில் சேர்த்தனர். அவர்கள் நடனமாடுவதோடு சேர்த்து பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தியுள்ளனர்.

விடுதிக்கு வருவோருக்கு உல்லாசம் அனுபவிக்க இப்பெண்களை வலுக்கட்டாயமாக இந்திய தம்பதியர் அனுப்பினர். இந்த குற்றம் நிரூபனமாதால் கணவன், மனைவிக்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்  ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததற்கு, இந்திய மதிப்பில் ரூ.2,50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், பெண் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற முதல் குற்றவாளி இந்த இந்திய தம்பதிகள் தான் என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News