டெல்லி பாலியல் வழக்கு! தூக்கு தண்டனை உறுதியானது! நீதிமன்றம் அதிரடி!
டெல்லி நிர்பயா வழக்கில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த குற்றவாளி முகேஷ் சிங்கின் மனுவை அதிரடியாக உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அக்சய் சிங் எனும் இன்னொரு குற்றவாளி, தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளான்.
டெல்லி நிர்பயா வழக்கில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த குற்றவாளி முகேஷ் சிங்கின் மனுவை அதிரடியாக உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அக்சய் சிங் எனும் இன்னொரு குற்றவாளி, தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளான்.
கருணை மனுவை நிராகரித்ததற்காக கூறப்பட்டிருக்கும் காரணங்கள் அனைத்தும் திருப்தி அளிப்பதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் விவகாரத்தில் சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்து விட்டதால், குற்றவாளிகள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் இன்னொரு குற்றவாளியான அக்சய் சிங், தூக்குத் தண்டனையில் இருந்து நிவாரணம் கோரி சீராய்வு மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளான். ஏற்கனவே அக்சய் சிங் தாக்கல் செய்திருந்த மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in