பக்தர்கள் ஷாக்.. திருப்பதியில் பிரசாதம் விலை 4 மடங்கு உயர்வு !

பக்தர்கள் ஷாக்.. திருப்பதியில் பிரசாதம் விலை 4 மடங்கு உயர்வு !

Update: 2021-07-05 17:11 GMT

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை திருப்பாவாடை சேவை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பாவாடை சேவையின் போது புளியோதரை, பாயாசம், லட்டு, ஜிலேபி, முறுக்கு, ஆப்பம் மற்றும் பிற சுவையான உணவு பொருட்கள் தேங்காய்களுடன் படைக்கப்பட்டு வருகிறது.

இந்த தரிசனத்தை காணவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விருப்பம் தெரிவிப்பர். எனினும் இந்த தரிசனத்துக்காக டிக்கெட் வாங்கி வரும் விஐபி பக்தர்களுக்கு ஜிலேபி மற்றும் தென்தொலா எனப்படும் முறுக்கு செட் மூலவருக்கு நைவேத்தியம் செய்து கொடுக்கப்படுவது வழக்கம். இந்த பிரசாத செட்டின் விலை 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், மிக குறைவான அளவில் மட்டுமே இந்த பிரசாதம் தயார் செய்யப்படும் நிலையில் அதன் விலையை தேவஸ்தானம் போர்டு உயர்த்த முடிவு செய்தது. ஆனால் ஒரே அடியாக நான்கு மடங்கு விலையை உயர்த்தி இனி ஒரு செட் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், 25 ரூபாய்க்கு இருந்த சிறிய லட்டு 50 ரூபாயாகவும், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய லட்டு 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

மேலும், வியாழக்கிழமை மட்டுமே தயார் செய்யப்படும் இந்த பிரசாதத்திற்கு பக்தர்களிடம் டிமாண்ட் அதிகமானதால் விலையை உயர்த்தியுள்ளோம் என்றும் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News