பணக்கார நாடானது இந்தியா!! 3,500 டன் தங்கம் கண்டுபிடிப்பு!! மகிழ்ச்சியில் மத்திய அரசு!!
3,500 டன் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு.. இந்தியாவின் பொருளாதார நிலைக்கு கைக்கொடுக்குமா?;
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3,500 டன் அளவுள்ள 2 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் தற்போது கையிருப்பு உள்ள மொத்த தங்கத்தை விட 5 மடங்கு அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்கச் சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பல சோதனைகளை செய்துள்ள ஆய்வு மையத்தின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் இரண்டு பெரிய தங்கச் சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு மையத்துடன் இணைந்து உத்தரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் நடத்திய ஆய்வில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி இந்தச் சுரங்கங்களில் 3,500 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்பாஹ்தி என்ற இடத்தில் 2,700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 650 டன் தங்க படிமங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in