உங்களிடமும் இந்த பான் கார்டு இருக்கா? ரூ.10 ஆயிரம் அபராதம் கட்டணும் !!
உங்களிடமும் இந்த பான் கார்டு இருக்கா? ரூ.10 ஆயிரம் அபராதம் கட்டணும் !!
இந்தியாவில் பான் கார்டு என்பது தனிநபரின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இது வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல, நிதி தொடர்பான விஷயங்கள் அனைத்தும் பான் கார்டு மூலமாகக் கண்காணிக்கப்படுகின்றன. பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும்போதும், மிகப் பெரிய தொகைக்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கும்போதும் பான்கார்டு கேட்கப்படுகிறது. மிக முக்கியமாக, வருமான வரி செலுத்துவதையும் வரி ஏய்ப்பு போன்றவற்றைத் தடுக்கவும் பான்கார்டுகள் கண்காணிக்கப்படுகின்றன.
அதனால்தான் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை போன்றவற்றில் பான்கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான்கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் சிறு தவறு அவர்களை மிகப் பெரிய பிரச்சினையில் சிக்க வைக்கலாம். ரூ.10,000 வரை அபராதம் செலுத்தவும் நேரிடலாம். பான்கார்டு விவரங்களைப் பூர்த்தி செய்யும்போது பிழைகள் இருக்கக் கூடாது. பான் எண்ணை சரியாகப் பதிவிட வேண்டும். அதேபோல, ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருப்பது குற்றமாகும்.
ஒருவேளை உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால் அதை வருமான வரித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் இதற்கான கோரிக்கையை வைக்கலாம். வருமான வரித் துறை வெப்சைட்டில் இருக்கும் "Request For New PAN Card Or/ And Changes Or Corrections in PAN Data." என்ற வசதியில் சென்று விவரங்களைப் பூர்த்தி செய்து பான் கார்டை சமர்ப்பிக்கலாம். முதல் பான் கார்டை சமர்ப்பிக்கும்போது இரண்டாவது பான் கார்டையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
newstm.in