குடிச்சா பொய் சொல்லமாட்டாங்க.. குடிமகன்களுக்கு அரசு அதிகாரி அளித்த சலுகை!
குடிச்சா பொய் சொல்லமாட்டாங்க.. குடிமகன்களுக்கு அரசு அதிகாரி அளித்த சலுகை!
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக இருக்கிறது. ஏன் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் முதல் விமானத்தில் பயணிக்கவும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம். இந்த நிலையில் இது தொடர்பாக அதிகாரியின் புதிய அறிவிப்பு சர்ச்சையாகி உள்ளது.
மத்தியப் பிரதேச தலைவர் போபாலில் இருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கந்த்வா மாவட்டம். இப்பகுதியில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மது குடித்தவர்கள் மட்டும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் காட்டத் தேவையில்லை என அரசு அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது, தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளோம். இதன்படி, இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே மதுபானங்களை வாங்க முடியும். இதுபற்றி எல்லா மதுக்கடைகளுக்கு வெளியிலும் போர்டு வைக்கப்படும். மதுக் குடித்தவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் காட்டத் தேவையில்லை.
ஒரு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்பதை மட்டும் மதுக் குடித்தவர்கள் சொன்னால் போதும். மதுக் குடித்தவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்பது எங்களது அனுபவம், என்று தெரிவித்துள்ளார். அதிகாரியின் இந்த அறிவிப்பு சர்ச்சையாகி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்த மருத்துவர்கள் போராடி வரும் நிலையில் இவ்வாறு கூறுவதா என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in