இரட்டை குண்டுவெடிப்பில் அமெரிக்க வீரர்கள் உள்பட 73 பேர் பலி 150 பேர் படுகாயம்..!!
இரட்டை குண்டுவெடிப்பில் அமெரிக்க வீரர்கள் உள்பட 73 பேர் பலி 150 பேர் படுகாயம்..!!
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 அமெரிக்க இராணுவ வீரர்கள். 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 150 பேர் காயமடைந்தனர்.இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதற்கிடையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என கூறினார்.மேலும், பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 30 மாலை வரை அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.