அபுதாபியில் ட்ரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உட்பட மூவர் பலி..!

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல்: 2 இந்தியர்கள் உட்பட மூவர் பலி..!

Update: 2022-01-17 21:00 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையம் அருகே, ட்ரோன் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அங்குள்ள எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கில் 3  எரிபொருள் டேங்குகள் தீப்பற்றி எரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. கடல்வழியாக  அபுதாபி அருகே வந்து ட்ரோன் விமானங்களை இயக்கி தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளிவந்துள்ளது.

Tags:    

Similar News