இனி பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்! முதல்வர் அறிவிப்பு!! 

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 110வது விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்றும், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு

Update: 2020-02-19 18:19 GMT

முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 110வது விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

 

Full View

அப்போது அவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என்றும், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயது ஆகும் போது ரூ.2லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு, சமூக பொருளாதார நிலையை கருதி இந்த சிறப்பு உதவி தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

newstm.in

Tags:    

Similar News