மத்திய பட்ஜெட் 2022 – 23 : முக்கிய அம்சங்களின் முழு விவரம்!!

மத்திய பட்ஜெட் 2022 – 23 : முக்கிய அம்சங்களின் முழு விவரம்!!

Update: 2022-02-01 12:50 GMT

மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மத்திய பட்ஜெட் 2022 – 23ஐ தாக்கல் செய்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற 44,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த நிதியாண்டில் 22,000 கிமீ தொலைவுக்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதாவரி – பெண்ணாறு – காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு குடிநீர் வழங்க 60,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 – 12ஆம் வகுப்பு வரை மாநில மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநில மொழிகளில் பாடம் நடத்த கூடுதலாக 200 கல்வி டிவி சேனல்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் “சிப்” பொருத்திய இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்.

மின்சார வாகனங்களுக்கு பிரத்யேக மையங்களில் பேட்டரியை மாற்றிக் கொள்வது தொடர்பாக திட்டம் கொண்டு வரப்படும்.

ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்படும்.

நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரே நாடு, ஒரே பதிவு முறையை கொண்டுவர திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஏலம் நடைபெறும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறைக்கு தேவையான தளவாடங்களில் 68%ஐ உள்நாட்டிலேயே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நடைமுறைகள் மாற்றியமைக்கப்படும்.

பாரத் நெட் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணையவழி சேவை தொடங்கப்படும்.

வங்கிகளுடன் இணைந்து தபால்துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநில மேம்பாட்டுக்காக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் 280 கிலோ வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அரசின் மூலதன செலவினங்களுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 35.4% அதிகம்.

மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 3 புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்றுவரி 15%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10%இல் இருந்து 14% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திலும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிக அளவில் வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சுமார் ரூ.1.40 லட்சம் கோடியாக உள்ளது.

வரும் ஆண்டில் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடி. வரவு ரூ.22.8 லட்சம் கோடியாக இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அரசின் நிதி பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 6.4%ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றுக்கு இறக்குமதி வரியில் சலுகை.

குடைக்கான இறக்குமதி வரி 20%ஆக உயர்ந்துள்ளது.

வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.


newstm.in

Similar News