வைகோ கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு
மாநிலங்களவையில் பேசிய வைகோ சென்னையிலிருந்து அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை ஏற்றக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் பேசிய வைகோ சென்னையிலிருந்து அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தினார்.இதனை ஏற்றுக் கொண்ட மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது என உறுதி அளித்துள்ளார்.
இதனால், சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை வாரியத்திற்கு தற்போது ஆபத்து இல்லை என சமூக ஆர்வலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
newstm.in