சென்னை மணலி பெட்ரோலியம் நிறுவனத்தில் தீ விபத்து! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கச்சா எண்ணெய் செல்லும் வால்வில் ஏற்பட்ட கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2020-02-04 15:55 GMT

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கச்சா எண்ணெய் செல்லும் வால்வில் ஏற்பட்ட கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். தீ மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மணலி பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சுற்றிலும் மக்கள் வசித்து வருவதால், இந்த தீ விபத்து குறித்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News