நெகிழ்ச்சி சம்பவம்! ஆய்வின் போது மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆட்சியர்!!

நெகிழ்ச்சி சம்பவம்! ஆய்வின் போது மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆட்சியர்!!

Update: 2021-12-18 18:25 GMT

ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தி, அவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி காலூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்வில் பங்கேற்கச் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது, 5 மற்றும் 6ஆம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுடன் உரையாடினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் சற்றும் எதிர்பார்க்காமல் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் எடுத்தார்.

இலக்கணம் குறித்த கேள்விகளையும் மாணவர்களிடம் கேட்டார். அப்போது விடை தெரியாத மாணவர்களுக்கு எப்படி அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எளிமையாக விளக்கிக் கூறினார்.

ஆசிரியராக மாறி பாடம் எடுத்த மாணவர்களிடம் உரையாடிய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டி வருகின்றனர்.

newstm.in

Similar News