கேரளா திரையுலகை சேர்ந்தவர் நடிகை தாரா கல்யாண். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபல நடன கலைஞரும் ஆவார். தாராவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தன்னுடைய மகள் சௌபாக்யாவிற்கும், அர்ஜுன் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.


தாரா தன் மகளுடன் இணைந்து டிக் டாக்கில் பாடல்களுக்கு நடனமாகும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து ஏராளமானோர் அவரை சமூக வலைதளங்களில் பின்தொடர தொடங்கினர். இந்நிலையில் சிலர் தாராவுக்கும் அவரது மருமகன் அர்ஜூனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், அதனால் தான் அர்ஜுனை தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் என்றும் பேசினர். இந்த செய்தி தாரா மற்றும் அவரது குடும்பத்தினரை மிகவும் காயப்படுத்தியது. இந்நிலையில் தாரா கல்யாண் கண்ணீர் விட்டு அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

newstm.in

Tags: