வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி இல்லை..!!

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி இல்லை..!!

Update: 2022-01-06 05:20 GMT

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து, வரும் 10-ம் தேதி வரை கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிக அளவில் பரவி வருவதன் காரணமாக, மாநிலங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

மேலும், மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில மாநிலங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. இன்று (ஜன.6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஞாயிறுகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News