முக அடையாளம் காணும் எப்ஆர்எஸ் செயலி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!

முக அடையாளம் காணும் எப்ஆர்எஸ் செயலி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!!;

Update: 2021-10-04 13:11 GMT

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காவல்துறையின் பயன்பாட்டுக்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை (Face Recognition Software) தொடங்கி வைத்தார்.

இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது (FRS), ஒரு தனி நபரின் புகைப்படத்தைக் காவல் நிலையங்களில் (Crime and Criminal Tracking Network & Systems) CCTNS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நபர்களின் புகைப்படத் தரவுகளோடு ஒப்பிட்டு அடையாளம் கண்டறியப் பயன்படுகிறது. 

அதாவது, சந்கே நபர்களை ஸ்கேன் செய்து முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் இந்த  எப்ஆர்எஸ் செயலியை வைத்து அதனை ரன் செய்தால் சம்மந்தப்பட்ட நபரின் முந்தைய குற்ற நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளில் இருந்து காட்டிக்கொடுத்துவிடும். அந்த வகையில் இந்த எப்ஆர்எஸ் செயலியை வடிவமைத்துள்ளனர்.

மேலும், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் ஆகிய புகைப்படங்களைத் தரவுகளில் உள்ள புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டறியலாம்.  இச்செயலியின் மூலம் ஒப்பீடு செய்யப்பட்ட புகைப்படத்தில் உள்ள நபர், வேறொரு காவல் நிலைய வழக்கில் தொடர்புடையவராக இருந்தால், காவல் அலுவலர்கள் இச்செயலியின் மூலமே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்நபரைப் பற்றிய தகவல் அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த FRS செயலியானது, குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Tags:    

Similar News