இரண்டு நாட்களுக்கு முழு லாக்டவுன் !! எங்கு தெரியுமா ?
இரண்டு நாட்களுக்கு முழு லாக்டவுன் !! எங்கு தெரியுமா ?
மத்திய பிரதேச அரசு இன்று மாலை 8 மணி முதல் திங்கள் காலை 7 மணிவரை இரண்டு நாட்கள் நகரங்களில் முழுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், குஜராத், பஞ்சாப், தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தான் அதிக கொரோனா பாதிப்பு இருக்கிறது.குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் மாநிலத்தில் தினசரி பாதிப்பு 55,000 மேல் அதிகரித்துள்ள நிலையில் வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணிவரை இரண்டு நாட்கள் முழுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.