கோவையில் நாளை முழு கடையடைப்பு!
சிஏஏவுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து தாக்கப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கோவை முழுவதும் கடையடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவை முழுவதும் கடையடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சிஏஏவுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து தாக்கப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆனந்தின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோவை முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் கடையடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் இருக்கின்றனர் என்று குற்றம்சாட்டிய அவர், காவல்துறை விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
newstm.in