கோவாவில் சர்வதேச திரைப்பட விழா.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு !!
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு !!
இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவாகவும், திரைத்துறையின் உயரிய கவுரவமாகவும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முத்திரை பதிக்கும் திரைப்படங்கள் வெளியிடப்படும். இந்த நிலையில் 52வது பதிப்பு, 51வது பதிப்பின் வெற்றியின் கலப்பு முறையிலான விழா நடைபெறுகிறது.
இந்த விழா ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது. சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால், இந்திய சர்வதேச திரைப்பட விழா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரை படைப்புகளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் நிகழ்வாக புகழ்பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து சிறந்த திரைப்படங்களை திரையிட்டு கவுரவப்படுத்தப்படுகிறது. அதனால், 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போட்டி பிரிவில் கலந்து கொள்வதற்காக வரும் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in