வீட்டின் பூஜை அறைக்குள் நுழைந்த நல்ல பாம்பு - நல்ல சகுனமா? கெட்டதா?
நம் நாட்டில் பாம்பு என்றாலே சென்டிமென்ட் தான். வீட்டிற்கு வந்தாலே நேர்த்திகடன் செலுத்தவில்லையோ, தெய்வக்குற்றம் ஆகிவிட்டதோ யோசிப்பது வழக்கம். அதுவும் வீட்டின் பூஜை அறைக்குள் பாம்பு நுழைந்துவிட்டால்! அப்படி வடமாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
நம் நாட்டில் பாம்பு என்றாலே சென்டிமென்ட் தான். வீட்டிற்கு வந்தாலே நேர்த்திகடன் செலுத்தவில்லையோ, தெய்வக்குற்றம் ஆகிவிட்டதோ யோசிப்பது வழக்கம். அதுவும் வீட்டின் பூஜை அறைக்குள் பாம்பு நுழைந்துவிட்டால்!
அப்படி வடமாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டிற்குள் புகுந்த பெரிய நல்ல பாம்பு ஒன்று பூஜை அறையில் சாமி போட்டோ அருகே படுத்துக்கொண்டது. இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவித்தனர்.
பாம்பு பிடிக்கும் நபர் வந்த போது, 10 அடி நீளம் இருந்த அந்த நாகப்பாம்பு படம் எடுத்து நின்றது. இதையடுத்து பாம்பு பிடிக்க வந்த நபர் லாவகமாக அந்த பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டார். பாம்பு பூஜை அறைக்குள் நுழைவதற்கு பலரும் பல காரணங்கள் சொன்னாலும், உணவுக்காகவே அது இடம் பெயர்ந்து செல்வதாக கூறப்படுகிறது.
newstm.in