ஆசிரியர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

ஆசிரியர்களுக்கு விடுமுறை.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

Update: 2022-01-20 13:07 GMT

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை ( 22-ம் தேதி ) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை (22ம் தேதி) ஒரு நாள் மட்டும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு 31.01.2022 வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் 22.01.2022 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News