“தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்..!” - பிரபல தமிழ் பிக்பாஸ் நடிகையால் பரபரப்பு
“தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்..!” - பிரபல தமிழ் பிக்பாஸ் நடிகையால் பரபரப்பு
சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். இவர், “நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என, தமிழக முதல்வருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மீரா மிதுன், அங்கு எழுந்த சர்ச்சைகளால் மக்களிடம் கவனம் ஈர்த்தார். பின்னர் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர், தனது சர்ச்சை கருத்துகளால் சமூக வலைதளங்களுக்கு தீனி போட்டார். இந்நிலையில் தற்போது, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தான் முன்பு பணிபுரிந்த அஜித் ரவி என்ற நிறுவனம் தன்னை வளர விடாமல் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், இது தற்கொலை அல்ல அஜித் ரவி செய்யும் கொலை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மீரா மிதுன், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன். அந்த அமைப்புக்காக நான் வேலை செய்து, அழகிப் பட்டம் வென்றேன். அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகி என் சொந்த அமைப்பை உருவாக்கினேன். அஜித் ரவி என் பெயரை கெடுத்துவிட்டார். என் மீது பொய் வழக்குகள் தொடர்ந்தார். சைபர் புல்லியிங் செய்தார். தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்னைகள் கொடுத்தார்.
அவர் என்ன செய்தாலும் அதில் இருந்து நான் மீண்டு வந்தேன். அவர் என்னை பின்தொடர்கிறார், என் வேலையை கெடுக்கிறார், என் ப்ராஜெக்டுகள் ரிலீஸாவதை தடுக்கிறார், என் குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்துகிறார். 3 ஆண்டுகளாக அவர் என்னை டார்ச்சர் செய்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கிரிமினல்களை வைத்து கொடுமைப்படுத்துகிறார். அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.
ஷூட்டிங் மற்றும் இந்த துறையில் ஜொலிப்பதே என் விருப்பம். ஆனால் அஜித் ரவியால் நான் பிரச்னைகளை எதிர்கொள்வதால் மன அழுத்தத்தில் இருக்கிறேன். தற்கொலை தான் எனக்கு இருக்கும் ஒரே வழி. என் தற்கொலைக்கு அஜித் ரவி மட்டும் தான் காரணம். சுஷாந்த் சிங் ராஜ்புட் போன்று நான் இறந்த பிறகு அஜித் ரவி தண்டிக்கப்பட வேண்டும். இது தற்கொலை அல்ல கொலை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.