ரகசிய அறை... ஏகப்பட்ட பெண்கள்! கணவனுக்கே தெரியாமல் வீட்டிலேயே விபச்சாரம் செய்து வந்த மனைவி!
ரகசிய அறை... ஏகப்பட்ட பெண்கள்! கணவனுக்கே தெரியாமல் வீட்டிலேயே விபச்சாரம் செய்து வந்த மனைவி!
சென்னை செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு இவர் ஒரு லாரி டிரைவர். இவருக்கு 2 மனைவி. 2-வது மனைவி பெயர் ராதா. இவர்களுக்கு ஒரு மகன் , மகள் இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். கடந்த 5 - ம் தேதி திடீரென ஒரு கும்பல் அன்புவின் வீட்டிற்குள் நுழைந்தது. அங்கிருந்த நகைகள் , 3 செல்போன்களை எடுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்று விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பு , செங்குன்றம் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசாரும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதேபோல அவர்களது செல்போன் சிக்னலையும் கண்காணித்தனர்.
மீஞ்சூர் பகுதியில் சிக்னல் காட்டியதும் , அந்த பகுதியை சுற்றி வளைத்து கடைசியில் ரகு ( 32 ) என்பவரை பிடித்து விட்டது. இவர் வியாசர்பாடியை சேர்ந்தவர். இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது பல பகீர் விஷயங்கள் வெளியே வந்தன.
இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவன் ரகு. அன்புவின் மனைவி ராதாவுக்கும் இவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர , ராதா விபச்சாரம் செய்து வருகிறாராம்.
அதாவது அந்த ஏரியாவில் யாரெல்லாம் வறுமையில் இருக்கிறார்களோ , அந்த பெண்களை குறி வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். இதற்காக தன் வீட்டு மொட்டை மாடியில் ஒரு ரூம் ரகசியமாக வைத்திருக்கிறாராம்.
இப்படி ஒரு ரூம் அந்த வீட்டில் உள்ளதே கணவருக்கு தெரியாதாம். போன வாரம் கூட ரகு , வேறு ஒரு பெண்ணுடன் ராதா வீட்டுக்கு வந்து ஜாலியாக இருந்திருக்கிறார்.
அப்போது தான் ராதா வீட்டில் நகைகளை கவனித்திருக்கிறார் ரகு. பிறகு ஆட்களுடன் வந்து கொள்ளை அடித்து விட்டு சென்றிருக்கிறார். இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏழரை சவரன் நகை, வெள்ளி நகை, ரூ.9,000 மதிப்புள்ள 3 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Newstm.in