அந்தரத்தில் இந்தியப் பொருளாதாரம்! ப.சிதம்பரம் பளீர்!!
நூறு நாள் வேலைத் திட்டம், விவசாயிகள் நிதி உதவி என மக்கள் கைகளில் பணம் புழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் இந்தத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு மிகக் குறைவாகவே இருப்பதால் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது
டெல்லியில் இருக்கும் கல்லூரி மாணவர்களிடையே முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உரை நிகழ்த்தினார்.
மத்திய அரசு 10 சதவீத வளர்ச்சியைக் காண்பதற்காக பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால் பணமதிப்பீடு மேலும் இழக்கும் அபாயம் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதை மத்திய அரசு உணரவில்லை.
ஜி.எஸ்.டி, வங்கிகள் மதிப்பீடு, பணமதிப்பிழப்பு என்ற மூன்று இமாலயத் தவறுகளை மத்திய அரசு நடைமுறைப் படுத்தியிருக்கிறது.
நூறு நாள் வேலைத் திட்டம், விவசாயிகள் நிதி உதவி என மக்கள் கைகளில் பணம் புழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் இந்தத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு மிகக் குறைவாகவே இருப்பதால் பொருளாதாரம் மேம்பட வழிகள் முற்றிலும் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் நொண்டி அடித்துக் கொண்டு இருக்க வேண்டியது தான் என்று மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
newstm.in