T20 உலகக் கோப்பை.. த்ரில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி!!
T20 உலகக் கோப்பை.. த்ரில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி!!;
மகளிர் டி20 உலகக் கோப்பையில் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக, மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில், இன்று நியூசிலாந்து அணியை மூன்றாவது போட்டியில் சந்தித்தது.
இன்று நடைப்பெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 46 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 134 ரன்கள் பெற்றால் வெற்றியடையலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை ரேச்சல் ப்ரீஸ்ட் 12 ரன்களுடன் ஷிகா பாண்டேவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 7 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்தது.
முதல் 10 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 46 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற 88 ரன்கள் தேவைப் பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ட்டின் மற்றும் கிரீன் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கிரீன் 23 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது. பின்னர் சிறப்பாக விளையாடி வந்த மார்ட்டினும் 25 ரன்களுக்கு ராதா யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் கெர்ர் அதிரடியாக விளையாடி நான்கு பவுண்டரிகளை விளாசினார். ஆனாலும், 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது.
நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி பெறுகிற மூன்றாவது வெற்றியாகும். இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு நான்காவது முறையாக தகுதிப் பெற்றுள்ளது.
newstm.in