குரல்வளையை நெறிப்பதற்கா சட்டம்!? ஆவேசமான நடிகர் சூர்யா!

குரல்வளையை நெறிப்பதற்கா சட்டம்!? ஆவேசமான நடிகர் சூர்யா!

Update: 2021-07-03 08:25 GMT

 

கடந்த 2019ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் 12ம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்தத் திருத்தச் சட்டப்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான திரைப்படங்களை மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும், திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறைத் தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்பட உள்ளன. 

இதையடுத்து, ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது, இன்று (2ம் தேதி) வரை பொதுமக்களின் பார்வைக்காக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தம், ‘படைப்பாளிகளின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாக மாறிவிடும்’ என, சினிமா துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காக, அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல.

இன்றுதான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபணையைத் தெரிவியுங்கள்” என்று பதிவிட்டு, இந்த மசோதா குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான இணையதள பக்கத்தை பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News