சாவி தொலைந்துவிட்டதா, பெட்டி தொலைந்துவிட்டதா..? - கேட்கிறார் சீமான்

சாவி தொலைந்துவிட்டதா, பெட்டி தொலைந்துவிட்டதா..? - கேட்கிறார் சீமான்

Update: 2021-06-28 16:20 GMT

“திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களை கடந்தும், தமிழகத்தின் பிரச்னைகள் தீர்வதற்கான அறிகுறிகள் இல்லை” என, நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவு அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம்.

பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. என்னவானது தமிழகத்தின் பிரச்னைகள்..? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்..? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே..! மக்களின் பிரச்னைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே..? அதனை எப்போது திறப்பார்கள்..? சாவி தொலைந்துவிட்டதா..? இல்லை, பெட்டியே தொலைந்துவிட்டதா..?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

Tags:    

Similar News