உ.பி.யில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி வீசும் அவலம்... அதிர்ச்சி வீடியோ!

உ.பி.யில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி வீசும் அவலம்... அதிர்ச்சி வீடியோ!

Update: 2021-06-01 05:25 GMT

சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் புன்னிய நதியான கங்கையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வரும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. உத்தரப்பிரதேச மாநிலத்திலும், அண்டை மாநிலமான பீகாரில் உள்ள கங்கை நதியில் உடல்கள் மிதந்தன, சில உடல்கள் கரையோரம் ஒதுங்கின. நாய் உள்ளிட்ட விலங்கினங்கள் உடல்களை சேதப்படுத்தின. இந்தக் காட்சிகள் நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சாலை மேம்பாலம் ஒன்றின் மீது இருந்து கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை இருவர் ரப்தி நதியில் தூக்கி எறியும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.

பிளாஸ்டிக் பையால் மூடப்பட்ட அந்த சடலத்தை பாலத்தின் மீது இருவர் தூக்கி வைக்கின்றனர். அந்த இருவரில் ஒருவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருக்கிறார். இந்த வீடியோவை அந்த பாலத்தில் பயணம் செய்த தம்பதியர் காரில் இருந்தவாறு எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.


 

Tags:    

Similar News