ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!

ஜாக்பாட் அறிவிப்பு! அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!

Update: 2021-12-11 08:39 GMT

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கேரளாவில் தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ, ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தற்போது போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருத்தப்பட்ட சம்பள உயர்வின் அடிப்படையில், அடிப்படை ஊதியம் 8,730 ரூபாயில் இருந்து 23 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த உயர்வு, கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி 137 சதவீதம் அதிகரிக்கப்பட்டு புதிய சம்பள விகிதத்துடன் இணைக்கப்பட்டு வழங்கப்படும். ஓட்டுநர், நடத்துனர், மெக்கானிக் ஆகிய பணிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பும், ஓராண்டு விடுமுறையும் 5,000 ரூபாய் உதவித்தொகையுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 1,200 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை வீட்டு வாடகைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படும். இறப்பு மற்றும் ஓய்வுக்கான பணிக்கொடை 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

ஓய்வூதியத்தின் மாற்றி அமைக்கப்பட்ட மதிப்பு 10 சதவீதமாக இருக்கும். மாதத்திற்கு 20 டியூட்டிகள் செய்யும் டிரைவர்களுக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணமாகவும், 20க்கு மேல் டியூட்டி செய்பவர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News