நகைக் கடன் கட்டணம் தள்ளுபடி.. சூப்பர் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

நகைக் கடன் கட்டணம் தள்ளுபடி.. சூப்பர் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Update: 2022-01-20 08:15 GMT

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) நகைக் கடன்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. 

நகைக் கடன் என்பது வெகுஜன மக்கள் உடனடி பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெறுகின்றனர். இதிலும் கிராமப்புறங்களில் நகைக் கடன்கள் அதிகளவில் வாங்கப்படுகின்றன. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி நகைக் கடன்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக பிராசஸிங் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தங்க நகைகள், வங்கிகளால் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்கள் ஆகியவற்றை வைத்து எஸ்பிஐ வங்கியில் நகைக் கடன் பெற முடியும். கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஆவண வேலைகள் குறைவு. இதுமட்டுமல்லாமல் வட்டியும் குறைவு என்பது கூடுதல் சிறப்பு என்பது கவனத்துக்குறியது.

எஸ்பிஐ நகைக் கடன் சலுகைகள்:

  • எஸ்பிஐ YONO ஆப் மூலம் நகைக் கடனுக்கு விண்ணப்பித்தால் பிராசஸிங் கட்டணம் (Processing fee) முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
  • நகைக் கடன் வட்டியை பொறுத்தவரை ஆண்டுக்கு 7.30% முதல் தொடங்குகிறது.
  • கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 36 மாதம் வரை.

கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  •  நகைக் கடன் விண்ணப்பம்
  • இரண்டு போட்டோ
  • அடையாள அட்டை
  • முகவரிச் சான்று
  • கல்வியறிவற்ற விண்ணப்பதாரராக இருந்தால் சாட்சிக் கடிதம்

newstm.in

Similar News