கபடி போட்டியில் வெற்றி.. ஆத்திரத்தில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை..!
கபடி போட்டியில் வெற்றி.. ஆத்திரத்தில் இளைஞர் கொலை..!
பொங்கல் விழாவில் வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடிய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கோவை அம்மன்குளம் தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர், 3 வெளியூர் கபடி வீரர்களை தனது அணியில் சேர்த்து விளையாடி போட்டியில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்துள்ளனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர். விளையாட்டு போட்டி விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in