வறுமையில் வாடும் கர்ணன் பட பாடகி மாரியம்மாள்..!
வறுமையில் வாடும் கர்ணன் பட பாடகி மாரியம்மாள்..!
கர்ணன் படத்தில் இடம்பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் மூலம் பிரபலமானவர் மாரியம்மாள். சிவகங்கை மாவட்டம் கிடாக்குழி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை பலரும் ‘கிடாக்குழி’ மாரியம்மாள் என்றே அழைக்கின்றனர்.
முன்னதாக இவர் வெடிகுண்டு முருகேசன், மாதவனும் மலர்விழியும், மதுரை சம்பவம், களவாணி 2 ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னரே கணவரை பிரிந்து மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
அவருக்கு மகளுக்கு திருமணமாகி மகன் பிறந்த நிலையில், மருமகனும் காலமாகிவிட்டார். மகள், பேரனுடன் தனியா வசித்து வந்தார். இந்நிலையில் மாரியம்மாள் பேரனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைக்கான சென்னைக்கு குடி பெயர்ந்தார்.
சினிமாவில் இவர் பாடல் படங்கள் பலவும் கொரோனா சூழலால் வெளியாகாமல் முடங்கியுள்ளன. இதனால் பணம் எதுவும் கைக்கு வரவில்லை. கையில் இருந்த பணமும் பேரனுக்கு சிகிச்சைப் பார்த்து கரைந்துவிட்டது. சொந்தமாக இருந்த வீட்டையும் சிகிச்சைக்கு பணமில்லாமல் விற்றுவிட்டார்.
நீதி நெருக்கடியால் வாடி வரும் அவர், 3 மாதங்களாக வாடகை கூட கொடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால் திரையுலகத்தினர் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.