பிடிச்சவங்க கூட எல்லாம் உல்லாசம்! அதிர வைத்த ப்ரியா! இரண்டு முறையும் உயிர் தப்பிய கணவர்! போலீசார் அதிர்ச்சி!!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மொட்டலுாரைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுரங்கன். இவரது மனைவி பிரியா அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். பிரியாவுக்கு பல ஆண்களுடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. அடிக்கடி ஒவ்வொருவருடன்

Update: 2020-02-18 21:16 GMT

illegal-love-try-to-murder-husband-school-teacher-arrested

 


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மொட்டலுாரைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுரங்கன். இவரது மனைவி பிரியா அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். பிரியாவுக்கு பல ஆண்களுடன் தவறான தொடர்பு இருந்துள்ளது.
அடிக்கடி ஒவ்வொருவருடன் சென்று உல்லாசம் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. இதையறிந்த பொன்னுரங்கன் ப்ரியாவைக் கண்டித்துள்ளார். கணவர் கண்டித்த போதும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு வராமல் இருக்க கணவரை கொல்ல பிரியா முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம், வீட்டில் துாங்கி கொண்டிருந்த பொன்னுரங்கனை, கள்ள காதலர்களான சக்திவேல், அருண்குமார் இருவருடன் சேர்ந்து தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது பொன்னுரங்கன் சுதாரித்து கொண்டு மூவரையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து அவர் மனைவி உள்பட மூன்று பேர் மீதும் காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த ஆசிரியை பிரியா, என் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலர்கள் உதவியுடன் கணவரை கார் ஏற்றி கொல்ல கடந்த 6ஆம் தேதி முயன்றேன். அப்போது அவர் லேசான காயங்களுடன் தப்பிவிட்டார். இதனால் காரிமங்கலம், மலைக்கோவிலைச் சேர்ந்த அருண்குமார், சக்திவேல் ஆகியோரை தனது வீட்டிற்கு வரவைத்து, துாங்கி கொண்டிருந்தவரை கொல்ல முயன்றோம் என தெரிவித்தார். இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிரியாவை சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற 2 பேரை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

newstm.in

Tags:    

Similar News