காதல் தான் பெருசு!! கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே சீன காதலியை மணந்த இந்தியர்!!
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே சீன காதலியை மணந்த இந்தியர்..!
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் சீன பெண்ணை மத்திய பிரதேச இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்சரை சேர்ந்த சத்யார்த் மிஸ்ரா என்பவரும் சீனாவை சேர்ந்த ஷிகாகோவும் கனடாவில் ஒன்றாகப் படித்து வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
பின்பு இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. எனினும், திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த இரு வீட்டார் முடிவு செய்துள்ளனர். அதன்படி மணப்பெண் ஷிகாகோவும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 30 பேர் மத்தியபிரதேச மாநிலம் மாண்ட்ஸர் வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என அரசு மருத்துவர்கள் தரப்பில் பரிசோதனை செய்யப்பட்டது.
newstm.in