திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை!! மேடையிலேயே உயிரிழந்த மணமகன்! கதறித் துடித்த

திருமணத்தில் சத்தமாக ஒலித்த டிஜே.. மேடையிலேயே உயிரிழந்த மணமகன்! கதறிய மணமகள்!!;

Update: 2020-02-17 20:59 GMT

திருமணம் என்றாலே அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு பாரம்பரிய கலாச்சாரத்துடன் நடைபெறும். குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்த்துடன் அரங்கேறும். ஆனால் தற்போது திருமண விழாக்களில் டிக்டாக், ஆடல் பாடல், டிஜே என கலாச்சாரத்தையே மாற்றியுள்ளனர். இந்த போக்கு தற்போது மணமகனின் உயிரையே பறித்துவிட்ட சோகம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் . 25 வயதான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் டிஜே இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ளார். அப்போது அதிக சத்தத்துடன் பாடல் ஒலிக்கப்பட்டதால், மணமகன் மேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதை தொடர்ந்து அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு மணமகள் கதறி அழுதார். திருமணமான அன்றே மணமகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News