மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினார்!! போலீஸ் மீது ஜாமியா மாணவிகள் பகீர் புகார்!!
மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. போலீஸ் மீது ஜாமியா மாணவிகள் பகீர் புகார்
குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் அந்தரங்க உறுப்புகளை குறிவைத்து போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் தாக்குதலில் காயமடைந்து மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் பலருக்கு கடுமையான காயங்கள் உள்ளதாகவும், இதனால் அவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சில மாணவர்களுக்கு லத்திகளால் மார்பில் தாக்கப்பட்டதால் உள் காயங்களும் ஏற்பட்டுள்ளன என்றும் கூறினர். சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரு மாணவி கூறுகையில், நான் கிழே விழுந்த சமயத்தில் ஒரு பெண் போலீசார் தனது பர்தாவை அகற்றி, லத்தியால் பிறப்புறுப்பு பகுதிகளில் தாக்கியதாக கூறினார்.
எனது பிறப்புறுப்பு உள்ளிட்ட வெளியில் சொல்ல முடியாத உடல் பாகங்களில் போலீசாரால் பூட்ஸால் தாக்கப்பட்டேன் என அழுதபடி தெரிவித்தார். மேலும் தங்களை வீடியோ எடுக்க முடியாத அளவிற்கு போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.
newstm.in