நீட் தேர்வு ரத்து செய்யப்படும்! கனிமொழி எம்.பி. உறுதி!

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்! கனிமொழி எம்.பி. உறுதி!

Update: 2021-05-12 07:04 GMT

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில்  மே 24 வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு  பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த சவால்களை எதிர்கொண்ட பின் நீட் தேர்வு ரத்து குறித்து வலியுறுத்தப்படும் எனவும் கனிமொழி எம்பி  உறுதி அளித்துள்ளார். அவர் இது குறித்த விடுத்த செய்திக்குறிப்பில் தமிழகத்தில் பரவும் கொரோன நோயை கட்டுப்படுத்தும் வகையிலும்  பல்வேறு  தடுப்பு முறைகளும், செயல்படும் விதத்தை ஆய்வு செய்யும் வகையில் குழுக்களும் அமைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

மாவட்ட வாரியாக தனித்தனிப்பகுதியாக பிரிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்கள் அரசின் பணிகளை சிரமேற்கொண்டு செய்து  நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா சவால்களை எதிர்கொண்ட பின்னர், நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் நிச்சயம் வலியுறுத்தப்படும் என கனிமொழி உறுதி அளித்துள்ளார். 
 

Tags:    

Similar News