புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை.. ஜன.2 வரை இரவு நேர ஊரடங்கு விதித்து அரசு உத்தரவு !

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை.. ஜன.2 வரை இரவு நேர ஊரடங்கு விதித்து அரசு உத்தரவு !

Update: 2021-12-27 19:09 GMT

கேரளாவில் வரும் 30 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா, கேரளா, அசாம், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்து கொள்ளலாம் என்று, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில், ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் 30 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
 
இது தொடர்பாக கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, வரும் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை, அதாவது நான்கு நாட்களுக்கு, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.

மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகள் தவிர, மற்ற கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மேலும் அத்தியாவசியமின்றி பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து கேரள மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


newstm.in

Tags:    

Similar News