சம்பளம் கிடையாது, கட்டாய விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!!

சம்பளம் கிடையாது, கட்டாய விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!!

Update: 2022-01-04 07:53 GMT

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு தர சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதை அடுத்து அனைத்து மாநிலங்களும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு, பள்ளி கல்லூரிகள் மூடல் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அந்த வகையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு தரவும், தடுப்பூசி செலுத்தாதோர் குறித்து வரும் 7ஆம் தேதிக்குள் துறை தலைவர்கள் அறிக்கை தரவும் அரசுத் துறைகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொள்ளாத அனைத்துத் துறை அரசு ஊழியர்களையும் கட்டாய விடுப்பில் அனுப்ப சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல ஒப்பந்த ஊழியர்களை சம்பளம் இல்லாமல் கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் என அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும் உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டது‌.

மேலும், வரும் 07.01.2021 தேதிக்குள் 100% தடுப்பூசி என்பதனை உறுதிப்படுத்தி அறிக்கையை சுகாதாரத் துறைக்கு அனுப்ப சார்பு செயலர் புனிதா மேரி தெரிவித்துள்ளார்அரசு அலுவலக வளாகத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News