ஓ. பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி !!
ஓ. பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.. தொண்டர்கள் அதிர்ச்சி !!
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தகவல் கூறப்படுகிறது.
முன்னதாக முதலமைச்சர் மு.க..ஸ்டாலின், அமைச்சர் சா.மு.நாசர், மருத்துவர் ராமதாஸ் ஆகியோரும் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பன்னீர்செல்வமும் கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in