கடந்த ஜூன் மாத இறுதியில் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது, வீரர்கள் குஷால் மெண்டிஸ், தன்சுகா குணதிலகா, நிரோஷன் டிக்வெலா ஆகியோர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி துர்ஹாமில் சுற்றித் திரிந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில்,இலங்கை அணி வீரர்கள் குஷால் மெண்டிஸ், தன்சுகா குணதிலகா, நிரோஷன் டிக்வெலா ஆகியோருக்கு தலா 37 லட்சம் ரூபாய் அபராதமும், உள்நாட்டுப் போட்டிகளில் 6 மாதங்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஓர் ஆண்டு அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கத் தடை விதித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.