மக்களே ஆலோசனை கூறுங்க.. வருவாயை பெருக்க புதிய முயற்சி !!

மக்களே ஆலோசனை கூறுங்க.. வருவாயை பெருக்க புதிய முயற்சி !!

Update: 2022-01-02 13:00 GMT

கட்டணமல்லாத வருவாயை பெருக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
 
ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் மட்டுமல்லாது ரயில் நிலையங்களில் விளம்பரம் உள்ளிட்டவை மூலமும் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் கட்டணமல்லாத பிற வருவாயை அதிகரிக்க மதுரை ரயில்வே கோட்டம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்களிடமிருந்து ஆலோசனைகளை பெறும் வகையில் ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் போட்டி ஒன்றை நடத்துவதாக அறிவித்துள்ளது. 
 


அதாவது, கட்டணமல்லாத வருவாயை பெருக்க கூறப்படும் ஆலோசனைகளில், சிறந்த 10 ஆலோசனைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மதுரை கோட்ட ரயில்வே அலுவலக வர்த்தக பிரிவில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
 
புதிய ஆலோசனைகளை இம்மாதம் 17ஆம் தேதிக்குள் மதுரை கோட்ட ரயில்வே அலுவலக வர்த்த பிரிவிலோ அல்லது innovativeideasforrly@gmail.comஎன்ற இணையதள முகவரியிலோ சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆலோசனைகளை வழங்க கடுமையாக யோசித்து வருகின்றனர்.

newstm.in

Similar News