சினேகாவின் பெண் குழந்தையின் புகைப்படம் வெளியானது!! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

‘அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து புகழின் உச்சியில் இருந்த போதே பெற்றோர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. விஹான் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 4 வயதாகிறது.

Update: 2020-03-09 20:17 GMT

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பரபரப்பாக நடித்து வந்த நடிகை சினேகா, இன்றளவிலும் ரசிகர்களின் மனதில் புன்னகை இளவரசியாகவே இருந்து வருகிறார். 

 

‘அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது,  இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து புகழின் உச்சியில் இருந்த போதே பெற்றோர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. விஹான் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 4 வயதாகிறது. 

 

இந்நிலையில் நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்தார். பின்னர் அழகான பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். ”தை மகள் வந்தாள்”என்று தனக்கு மகள் பிறந்துள்ளதை பிரசன்னா ட்விட்டரில் அறிவித்திருந்தார். தற்போது முதல் முறையாக தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை நடிகை சினேகா பகிர்ந்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News