கோழிப்பண்ணையில் தீ விபத்து! 2,500 கோழிகள் பலி!!
கோழிப்பண்ணையில் தீ விபத்து! 2,500 கோழிகள் பலி!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,500 கோழிகள் தீயில் கருவி உயிரிழந்தன.
வழிக்கடவு என்ற இடத்தில் இருந்த கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கியதை அடுத்து கோழிப்பண்ணையில் இருந்த பொருட்கள், கோழிகள் எல்லாம் சேர்ந்து எரியத் தொடங்கின.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
newstm.in