பிரதமர் மோடிக்கு திருமண பத்திரிக்கை!! ரிக்‌ஷா ஓட்டுநரை சந்தித்தார் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டார். அப்போது தனக்கு திருமண பத்திரிக்கையை அனுப்பி வைத்திருந்த ரிக்ஷா ஓட்டுநர் மங்கள் கேவத்தை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவரது ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார். தூய்மை இந்தியா இயக்கத்துக்காக மங்கள் கேவத் அளித்த

Update: 2020-02-18 22:06 GMT

இந்திய பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத், தன்னுடைய மகளின் திருமண அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்து, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பிரதமருக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் ரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் திருமண விழாவிற்கு பிரதமர்  மோடி செல்லவில்லை. என்றாலும், மணமக்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்டார். அப்போது தனக்கு திருமண பத்திரிக்கையை அனுப்பி வைத்திருந்த ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத்தை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவரது ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார். தூய்மை இந்தியா இயக்கத்துக்காக மங்கள் கேவத் அளித்த பங்களிப்புக்காக, பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தினால் மங்கள் கேவத் தன் கிராமத்தில் கங்கை ஆற்றங்கரையை தானே சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News