பிரியங்கா காந்தியின் ஓவியம் ரூ.2 கோடியா?.. யெஸ் வங்கி திவாலான ரகசியம்!!

பிரியங்கா காந்தியின் ஓவியம் ரூ.2 கோடியா?.. யெஸ் வங்கி திவாலான ரகசியம்!!;

Update: 2020-03-09 15:29 GMT

யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், அவரை அலுவலகத்திற்கு சென்று 30 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் வாரக்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பணமோசடி வழக்கில் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் பிரியங்கா காந்தியின் ஓவியத்தை இரண்டு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, யெஸ் வங்கி நிதி மோசடி செய்துள்ளதாக தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

பிரியங்கா காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் எம்.எப். உசேன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு ராணா கபூரிடம் விற்பனை செய்துள்ளார். இந்த தொகை காசோலையாக பெறப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு பிரியங்கா காந்தியின் வருமான வரி கணக்கு தாக்கலின்போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

மேலும் யெஸ் வங்கி எந்தவித அனுமதியும் இல்லாமல் தன்னிச்சையாக கிரிக்கெட் போட்டியின் போது, வீரர்கள் சிக்சர் அடித்தால் ஒரு லட்சம், கேட்ச் பிடித்தால் ஒரு லட்சம் என்றெல்லாம் பரிசுகளை கிரிக்கெட் போட்டிகளின்போது அள்ளி விட்டதும் இப்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.  

newstm.in

Tags:    

Similar News