மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய ரயில்வே ஊழியர்..! 6 மாதமாக அடைத்து வைத்து கொடூரம்..
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கர்ப்பமாக்கிய ரயில்வே ஊழியர்..! 6 மாதமாக அடைத்து வைத்து கொடூரம்..
சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து ஆறுமாதமாக தன்னுடைய வீட்டிலேயே அடைத்து வைத்து நாள்தோறும் பாலியல் பலாத்காரம் செய்த காமூகன் சிக்கினார். ஆந்திராவைச் சேர்ந்த சேர்ந்த சங்கர்ராவ் என்பவர், சென்னையில் ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபரில் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டு சென்னை திரும்பினர். அப்போது அங்கு பேருந்து நிலையத்தில் தனியாக ஒரு சிறுமி நிற்பதை பார்த்த சங்கர்ராவ், அந்த சிறுமியிடம் நைசாக பேசி மிட்டாய் வாங்கி கொடுத்து சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.
விசாரணையில் பாட்டியின் அரவணைப்பில் வசித்து வந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் ஒரு நாள் வீட்டில் இருந்து வழிதவறி சென்றபோது சங்கர் ராவ் பிடியில் சிக்கியதும் தெரியவந்தது. சங்கர் ராவ் ஏற்கெனவே ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
newstm.in