உளவுத்துறை அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி, அரசு வேலை!

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் வன்முறையாக மாறியது. இதில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வன்முறை தீவிரம் அடைந்ததை அடுத்து ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொல்லப்பட்டார்.;

Update: 2020-03-03 01:41 GMT

டெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் எனவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 


டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் வன்முறையாக மாறியது. இதில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வன்முறை தீவிரம் அடைந்ததை அடுத்து ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கித் ஷர்மா கொல்லப்பட்டார். பணியின் போது உயிரிழந்த அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் அங்கித் ஷர்மாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். 


டெல்லி வன்முறையில் உயிரிழந்த காவல் அதிகாரி ரத்தன் லால் குடும்பத்திற்கு ஏற்கனவே இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உளவுத்துறை அதிகாரி குடும்பத்திற்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கலவரம் பாதித்த பகுதிகளை டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பார்வையிட்டார். ஷிவ விஹார், ஜாப்ராபாத், பைஜான்பூரா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆளுநர் மக்களை சந்தித்தார். 
 

newstm.in

Tags:    

Similar News