பிக்பாஸ் தர்ஷன் மீது சனம் ஷெட்டி புகார்! ஆதாரத்தை வெளியிட்டார்!
பிக்பாஸ் தர்ஷன் மீது சனம் ஷெட்டி புகார்! ஆதாரத்தை வெளியிட்டார்!
உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தர்ஷன். பிக்பாஸ் சீசன் 3ல் வெற்றி பெறாவிட்டாலும் ரசிகர்களின் மனதில் தர்ஷனுக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் பிரபல மாடல் அழகி சனம் ஷெட்டி இன்று பிக்பாஸ் தர்ஷன் மீது சென்னை கூடுதல் ஆணையரிடம் பரபரப்பாக புகார் அளித்தார்.
'அவருக்கும் தர்ஷனுக்கும் கடந்த மே மாதமே நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறி அதற்கான ஆதாரங்களையும் அளித்த சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றியதாகவும், சில நடிகர்களுடன் சனம் ஷெட்டியைத் தொடர்பு படுத்தி, திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறினார்.
இது குறித்து கேட்ட போது, என் ரசிகர்கள் உன்னை தவறாகச் சித்தரிப்பார்கள் என்று தர்ஷன் மிரட்டியதாகவும், தர்ஷனுக்காக தான் 15 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும், தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
newstm.in